9 நாட்களில் 9,158 விண்ணப்பங்கள்! இணையவழி கடவுசீட்டில் மக்கள் ஆர்வம்

கடந்த 9 நாட்களில் கடவுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் 9,158 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்கான இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது, விண்ணப்பதாரர் தங்கள் கை ரேகையினை பதிவு செய்ய நியமிக்கப்பட்ட 51 பிரதேச செயலக அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிட வேண்டும். இணையவழி அல்லது BOC கிளைக்குச் சென்று பணம் செலுத்தலாம்.

இணையவழி பயன்பாடுகள் மூலம் இரண்டு வகையான சேவைகள் கிடைக்கின்றன.

அவசர சேவைக்கு 15,000 ரூபா அதற்கு கடவுச்சீட்டு 3 நாட்களுக்குள் கூரியர் மூலம் அனுப்பப்படும். சாதாரண சேவையின் மூலம், கடவுச்சீட்டு 14 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பப்படும் மற்றும் அதற்கு 5,000 ரூபாவும் அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply