மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது மாணவன் நீரில் மூழ்கி பலி!

கண்டி, தன்னகும்புர பாலத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற இரு மாணவர்களில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மற்றுமொரு மாணவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவன் கண்டியில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடையவர் எனவும் மற்றைய மாணவன் அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இது தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply