யாழில் தனியார் பேருந்து – வேன் மோதி விபத்து! மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கொடிகாமம் பகுதியில் வேன் ஒன்றுடன் மோதி தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழிலில் இருந்து வந்த தனியார் பேருந்து, கிளிநொச்சியில் இருந்து வந்த வேன் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையிலே இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் படுகாயமடைந்துள்ள நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply