காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!

இன்று காலை 7.30 மணியளவில் மங்களகம கனுவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மங்களகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மங்களகம 26 கனுவையில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான டி.எம்.இந்திரவதி (வயது 50) என்பவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

தனது தோட்டத்தில் முந்திரி சேகரிக்கச் சென்ற அவர், அங்கு காட்டு யானை இருப்பதை அறிந்ததும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய போது யானை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply