A/L பரீட்சாத்திகளுக்கு இன்று முதல் செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்.

இவ்வருடம் பரீட்சை எழுதிய A/L பரீட்சாத்திகளுக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பாடங்கள் தொடர்பான செயன்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டைகள் குறித்த அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவற்றை தபால் மூலம் அவர்களது தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் https://onlineexams.gov.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முன்பு வழங்கப்பட்ட அனுமதி அட்டைகள் இனி செல்லுபடியாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை தொடர்பான தெளிவுபடுத்தல்கள் அல்லது தகவல்களுக்கு மாணவர்கள் 1911 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது 0112 784 208, 0112 784 537, 0112 786 616 அல்லது 0112 785 922 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply