இந்திய அணித்தலைவராக பாண்டியாவை நியமிக்க வேண்டும்! ரவி சாஸ்திரி வலியுறுத்தல்

உலக கிண்ண தொடருக்குப் பிறகு இந்திய அணியின் அணித்தலைவராக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணியின் ஓல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் அவரை ரோகித் ஷர்மாவிற்கு பின் ஒருநாள் மற்றும் T20 ஆட்டங்களுக்கான அணித்தலைவராக நியமிக்க வேண்டும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்

வருகின்ற ஒக்டோபர் மாதம் 50 ஓவர் உலக கிண்ண தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு பிறகு புதிய அணித்தலைவர் நியமிக்க வேண்டும் என ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply