யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குருநகர் ஐந்து மாடி வீட்டு தொகுதிக்கு அருகில் குறித்த இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது , 07 கிராம் 05 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

இதேவேளை, மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் குறித்த இளைஞனையும், மீட்கப்பட்ட போதைப்பொருளையும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply