தொல்லியல் விவகாரம் – பௌத்த தேரர்களை கடுமையாக சாடியுள்ள விதுர!

பௌத்த தேரர்களே வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களுக்கு காணி அபகரிப்பு குறித்து வீண் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு தொல்லியல் விவகாரத்தில் பௌத்த தேரர்களும், அரசியல்வாதிகளும் தலையிடுவதையும் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழா காணிகள் தொல்லியல் என்ற பெயரால் அபகரிப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாற தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தொல்பொருளியல் விவகாரத்தில் பௌத்த தேரர்கள் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் பௌத்த தேரர்களிடம் நேரடியாக தெரிவித்துள்ள போதிலும், அவர்கள் அதனை ஏற்கவில்லை என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

தொல்பொருள் திணைக்களம் ஆய்வுகளை முன்னெடுக்கும் பகுதிகளுக்குச் சென்று சில பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக வீண் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே இந்த விடயத்தில் அவர்கள் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொல்பொருளியல் என்பது அரச சட்டத்துக்குட்பட்ட விடயமாகும். தொல்பொருள் கட்டளை சட்டம் இன்றும் நடைமுறையிலுள்ளது.

அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். சட்டத்துக்கமைய தொல்பொருள் திணைக்களத்துக்கு மாத்திரம் அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டள்ளார்.

அதேவேளை, இந்து ஆலயங்களை அழிப்பதற்கோ , தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கோ எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மாத்திரமே அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் இலாபத்தை ஈட்ட முயற்சிக்காமல் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க வட, கிழக்கு அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply