இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – 20 பேருக்கு காயம்

எஹலியகொட பிரதேசத்தில் இன்று காலை இரண்டு தனியார் பயணிகள் பேருந்து மோதிக்கொண்டதில் ஏறக்குறைய 20 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 10.00 மணியளவில் இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பயணிகள் பேருந்து வீதியை விட்டு விலகி வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு சொகுசு பயணிகள் பேருந்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதனால், சொகுசு பேருந்து முன்னோக்கி தள்ளப்பட்டு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வான் மீது மோதியது.

விபத்தில் காயமடைந்த ஏறக்குறைய 20 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவர்களில் சம்பவத்தின் போது வீதியோரம் நடந்து சென்ற பாதசாரிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply