உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி!

பொகவந்தலாவை பகுதியில் உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (1) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழந்தையின் தாய் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்ட்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து குழந்தை பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply