கொழும்பில் நீதிகோரி ஊழியர்கள் போராட்டம் – களமிறக்கப்பட்ட பொலிஸார்!

கொழும்பில் ஊழியர்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தனர்.

டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியே இன்றைய தினம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரிவதற்காக இணைத்துக்கொள்ளப்பட்ட தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தமக்கு நிரந்த நியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தே  போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் போராட்டத்தில் முன்னெடுத்திருந்த போதும், அது தொடர்பில் இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.

ஆகவே தமது நியமனம் தொடர்பில் சாதகமான முடிவை அரசாங்கம் தரவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டெங்கு ஒழிப்பு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply