யாழ் மாநகர சபையின் நடமாடும் சேவை தொடர்பான அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி எதிர்வரும் 28.06.2023 புதன்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை நடமாடும் சேவை ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள NSR திருமண மண்டப நுழைவாயிலில் நடைபெறவுள்ளது.

இதில், 14 மற்றும் 15 ஆம் வட்டாரங்களுக்கான ஆதனவரி அறிவித்தல் படிவம் அல்லது சோலை வரி வழங்கல்,பெயர்மாற்ற விண்ணப்பப்படிவம் வழங்கல், துவிச்சக்கரவண்டி உரிமம் வழங்கல் போன்ற சேவைகளை வழங்குவதுடன், பொதுமக்களால் இதுவரை காலமும் செலுத்தாதுள்ள ஆதனவரி நிலுவைகள், நடப்பாண்டு ஆதனவரி போன்றவற்றைப் பெற்று யாழ் மாநகர சபையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரித்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் நடப்பாண்டின் ஆதனவரியினை முழுமையாக செலுத்தும் பட்சத்தில் மூன்றாம், நான்காம் காலாண்டுக்கான ஆதனவரியில் 5 சதவீத கழிவினைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply