பொலிஸ் நிலையத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் நிலையத்தின் கதவுகளை உடைத்து பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்களில் பெண்களும் அடங்குவதாகவும், பெரும்பாலான ஆண்கள் போதையில் இருந்ததாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் ஒருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும்,.பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த வானத்தை நோக்கிச் சுடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தால், பொலிஸாரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொலிஸாரின் வானை நோக்கிய துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பின்னர், அந்த குழுவினர் முற்றுகையை கைவிட்டு வீதிக்கு சென்று, ஒரு மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பிற்பாடு கலைந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply