முக்கிய பிரமுகரை கொலை செய்யும் சதித்திட்டத்தில் பிக்கு – ஆரம்பமாகியது விசாரணை!

பௌத்த பிக்கு ஒருவர் அபே ஜனபல கட்சியின் தலைவரை கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னைக் கொலை செய்வதற்காக, குறித்த பிக்கு பாதாள உலகக்குழுவொன்றுக்கு ஒப்பந்தமொன்றை வழங்கியிருப்பதாக அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன், அவரது முறைப்பாட்டுக்கு ஆதாரமாக ஒலிப்பதிவு ஒன்றையும், புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் கையளித்துள்ளார்.

அவரின் முறைப்பட்டிற்கு அமைய படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சமன் பெரேராவை கொலை செய்வதற்காக ஆதரவு வழங்குமாறு கோரி அவர் வசிக்கும் இந்துருவ – கோணகல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு ஐந்து லட்சம் ரூபா வழங்குவதாகவும் குறித்த பிக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், குறித்த பெண்ணும் இன்னொரு இளைஞரும் சேர்ந்து தன்னை படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply