மருந்தாக்கல் சபையில் மோசடி – சஜித் விடுத்துள்ள வலியுறுத்தல்!

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் செயலாளர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஒளடதவியலாளர் சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தேசிய மருந்துகள் அதிகார சபை வினைதிறனுடன் செயற்பட வேண்டும்.

இது தொடர்பான கண்காணிப்புக்களை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply