நிவாரண கொடுப்பனவு முறைகேட்டுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், தலவாக்கலையில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மொன்று இடம்பெற்றது.

தகுதி இருந்தும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த பலரும் அத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை எனவும் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும்  கூறி, தமது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply