தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் பலி

நாவலப்பிட்டியின் மொண்டிகிரிஸ்டோ தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றின் அறையினுள் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புடவையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் கழுத்து சிக்குண்டு 9  வயதான சிறுவனே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் இருந்த மற்றுமொரு சிறு குழந்தைக்கு கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்த போதே,சேலை தவறுதலாக கழுத்தில் மாட்டி, சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக  நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply