பேருந்து மோதி பொலிஸ் பரிசோதகர் பலி!

மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாணந்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பிரதான பரிசோதகரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான 47 வயதுடைய ஜகத் சமிந்த பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்த பேருந்து ஒன்றுடன் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்த பொலிஸ் பரிசோதகர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply