இலங்கைக்கான விமான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள Air China!

சீனாவின் எயார் சைனா (Air China), செங்டுவுக்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது

அதன்படி, எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி முதல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை செங்டு மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையே விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செங்டு தியான்ஃபு (Tianfu) சர்வதேச விமான நிலையத்திலிருந்து வரும் விமானங்கள் குறித்த தினங்களில் இரவு 08:55 க்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

அத்துடன், செங்டுவுக்கான விமானம் இரவு 10:15 க்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply