சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள மகிந்த!

சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று(28) விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் சமுர்த்தி இயக்கத்துடன் இணைந்து அமுல்படுத்தப்பட்ட அஸ்வசும எனும் மானியத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply