அமெரிக்காவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றவர் கைது

அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் , கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக சுமார் 800 இந்தியர்களை அழைத்து சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 49 வயதுடைய ரஜிந்தர் பால் சிங் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். ஜஸ்பால் கில் (வயது 49). இவர்

சந்தேகநபர், இதன் மூலம் 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வரை ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், சுமார் 4 ஆண்டுகாலமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்ட பொலிஸார், 45 ஆயிரம் டொலர்களையும், போலி ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபருக்கு, 45 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்ததையடுத்து, சிறைத்தண்டனைக்குப் பிறகு, அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply