பேரனால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பாட்டி

கேகாலை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் பாட்டி ஒருவர், தனது பேரனால் வெட்டிக் கொல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பாட்டி, கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பில் கேகாலை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும், தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற உயிரிழந்தவரின் பேரன் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply