வெளிநாட்டவர்கள் ஹெரோயினுடன்  கைது!

மாலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் ஹெரோயின் அடங்கிய பொதியுடன் 6 ஈரானியர்களும் 2 பாகிஸ்தானியர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மாலைத்தீவுக்கு அருகில் உள்ள கடலில் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பலை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 22 அன்று வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 48 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்களிடமிருந்து 926 கிராம் ஹெரோயின் கைப்பெற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply