தீக்கிரையாகிய அதிசொகுசு பேருந்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசுப் பேருந்து தீடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது.

இச்சம்பவம் மதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்தில் 43 பேர் பயணித்ததாகவும், பயணிகளுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply