முல்லைத்தீவு மனித எச்சங்கள் மீட்பு – பெண் போராளிகளின் தடையங்கள் என சந்தேகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியு போதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன் போது இனங்காணப்பட்டுள்ளன.

இது பெண் போராளிகளின் தடையங்கள் என சந்தேகிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply