‘பெண்பிள்ளையாக வாழ எனக்கு விருப்பமில்லை’ – கடிதம் எழுதி வைத்துவிட்டு 14 வயது சிறுமி தற்கொலை!

” பெண்பிள்ளையாக வாழ எனக்கு விருப்பமில்லை, ஆணாக வாழவே விரும்புகிறேன் ” என கடிதம் எழுதிவைத்துவிட்டு, சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி 14 வயதுடையவர் என காவல்துரையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிறுமி தற்கொலை செய்து கொண்ட அறையிலிருந்து அவரது தாயாருக்கு அவர் எழுதிய கடிதமொன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தில் சிறுமி, ” நான் ஆணாக, சிறுவனாக வாழவே ஆசைப்படுகிறேன். ஒரு பெண்ணாக வாழ்வதை நினைத்து நான் கவலைப்படுகிறேன்.

ஒரு பெண்குழந்தையாக பிறந்து வாழ்வது எனக்கு கவலையளிக்கிறது. நான் ஓர் ஆணை போல வாழ விரும்புகின்றேன். ஆனால், அதற்கு அனுமதிக்கின்றார்கள் இல்லை. தாக்கப்பட்ட சிறுமியாக வாழ்வது குறித்து நான் கவலையடைகிறேன்.

நான் வீட்டிலும் பாடசாலையிலும் ஒரு பெண்பிள்ளை போல வாழவேண்டியுள்ளது. ஒரு ஆண்பிள்ளையாக நான் இல்லாதது எனக்கு கவலையளிக்கிறது ” என எழுதியுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமி, ஒரு சிறுவனைப் போல நடந்துகொள்வார் என்றும் அவரது அந்த இயல்பினை மாற்றிக்கொள்ள வேண்டும் என உறவினர்கள் சிறுமிக்கு அழுத்தம் கொடுத்துள்ள நிலையிலேயே அவள் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply