கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் மோதி விபத்து – 48 பேர் உயிரிழப்பு

கென்யாவில் கண்டெய்னர்  ஒன்று, அருகில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேகமாக வந்த கண்டெய்னர் கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் வீதியில் இருந்து விலகி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் மீதும் வீதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 30 ற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply