நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட ரொதும்ப ரசிகவின் நண்பர்கள்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலக பிரமுகர் ரொதும்ப ரசிகவின் நான்கு முக்கிய நண்பர்கள் AK 47 ஆயுதம் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 9mm கைத்துப்பாக்கியுடன் மாத்தறை மாகந்துரவில் வைத்து விசேட பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள், கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப் படை தெரிவித்துள்ளது.

அவர்களிடம் இருந்து 12 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 9mm வெடிமருந்துகளுடன் கூடிய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, AK 47 ரக துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளன.

முலட்டியன மற்றும் மாகந்துர பிரதேசத்தை சேர்ந்த 36, 43, 44 மற்றும் 51 வயதுடைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திஹாகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

திட்டமிட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை பெற்று பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரொதும்ப ரஷிகா, உயிரிழந்த பாதாள உலக பிரமுகர் மாகந்துரே மதுஷுடன் நெருங்கிய உறவை பேணி வந்தவர் என தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply