விபத்தில் ஒருவர் பலி – 2 சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்!

பதுளை – ஹாலி எல வீதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு சிறுவர்களும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் எல்ல பகுதியைச் சேர்ந்த 51 வயதான மகிழுந்து சாரதியே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து வீதி அருகில் இருந்த மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply