யுவதி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து, யுவதியைத் தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரின் காதலியே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேகநபரான, கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பணி இடைநிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் நேற்று  பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பில் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்திலும் அறிக்கை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply