கொலம்பியாவில் பயிற்சி விமானங்கள் விபத்து – இருவர் பலி

கொலம்பியாவில், நடுவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது  இரு இராணுவ விமானங்கள் மோதியதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து, கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அபியாய் விமானப்படை தளத்தில், கொலம்பிய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் விமானிகள் சாகச பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது, எதிர்பாராத விதமாக 2 விமானங்கள் ஒன்றோடொன்று மோதி தீப்பற்றியது.

குறித்த தீ விபத்தில் 2 விமானங்களில் பயணித்த விமானிகளும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply