யாழ் நகர் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞன் யாழ் மாவட்ட காவல் துறை புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 28 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து 30 லீற்றர் கோடா மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply