அமெரிக்காவிலுள்ள இந்திய துணை தூதரகம் தீக்கிரை

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்தியத் துணை தூதரகத்துக்கு காலிஸ்தான் ஆதரவாளர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது,கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்க நேரப்படி, 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, இந் நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த தீ வைப்புக் காட்சிகளைப்  பதிவிட்டு, ஒலிப்பதிவுடன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் காணொளியாக வெளியிட்டுள்ளனர்.

குறித்த தீ வைப்புச் சம்பவத்தையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குறித்த சம்பவத்தில் யாருக்கும் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சான்பிரான்சிஸ்கோ நகரப் பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply