பளையில் கப் ரக வாகனம் விபத்து – சராதி படுகாயம்

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காடு சந்தியை அண்மித்த ஏ9 வீதியில், யாழ் நோக்கி விற்பனை பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த சிறிய கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் வாகனத்தைச் செலுத்திய சாரதி படுகாயமடைந்த நிலையில், பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்தையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply