நாட்டின் பல பகுதிகளில் பலத்தமழை பெய்யக்கூடும்!

தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால் நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.

அதன்படி, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும்.

இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதுடன் சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply