வரணி சுட்டிபுரம் பகுதியில் கோர விபத்து – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

வடமராட்சி தேவராளி பகுதியில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வடமராட்சி தேவராளி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய புஸ்பராசா ராஜ்குமார் என்ற இளம் குடும்பத்தரே உயிரிழந்தவராவார்.

குறித்த நபருக்கு திருமணமாகி  ஒருவருடமாகின்ற நிலையில் இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம்
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply