பயணிகள் போக்குவரத்திற்கு புதிய தேசிய கொள்கை

பயணிகள் போக்குவரத்திற்கான தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இவ்வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளதாக போக்குவரத்து துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பயணிகள் போக்குவரத்திற்கான தேசிய கொள்கையொன்றை தயாரிப்பது தொடர்பாக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து போக்குவரத்து தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க இதனை குறிப்பிட்டிருந்தார்.

நாட்டுக்கு ஏற்ற தரமான பயணிகள் போக்குவரத்து சேவையை பேணுவதற்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன போக்குவரத்து திட்டத்தை உருவாக்க புதிய தேசிய கொள்கையை தயாரிப்பதாக அமைச்சர் உறுதியளித்ததாக ரணசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply