தென்னாபிரிக்காவின் புறநகர்ப் பகுதியில் வாயுக் கசிவு – 16 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவின்  ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் வாயுக் கசிவு ஏற்பட்டதனால் 24 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில் சிலிண்டரில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தைகள் பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக தென்னாபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்த இடத்தில் தேடுதல் பணிகளும் மீட்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தும்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தங்கத்தைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் நைத்திரைட் ஒக்சைட் வாயு கசிந்து, அதனைச் சுவாசித்ததால் உயிரிழப்புக்கள் நேர்ந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான தீவிர விசாரணையினை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply