வீதியின் ஓரம் நின்ற சிறுவனை மோதிய வாகனம் – சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ -9 வீதியில் இன்று(06) இடம்பெற்ற விபத்தில் 13 வயது வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பளை முல்லையடி பகுதியைச் சேர்ந்த ராஜபாஸ்கரன் யகுசிகன் என்ற 13 வயதுடைய பாடசாலை மாணவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கடையொன்றிற்குச் சென்ற பின்னர் வீதியை கடப்பதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ். நோக்கி வேகமாக பயணித்த கப் ரக வாகனம் ஒன்று மோதித்தள்ளியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் கப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply