தலைமை சமையல்காரரைக் குத்திக் கொலை செய்த இந்திய முகாமையாளர் கைது

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளரான இந்தியப் பிரஜை ஒருவர், உணவகத்தின் பிரதான சமையல்காரரை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த உணவகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர், 29 வயதுடைய அஜய் குமார் என்பதுடன் அவரும் இந்தியப் பிரஜை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்றிரவு சந்தேகநபருக்கும் பாதிக்கப்பட்ட 29 வயதுடையவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அது கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலைக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதத்துடன் சந்தேக நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply