பொருளாதார அழிவிற்கு யார் காரணம்? விரைவில் வெளிவர வேண்டும் உண்மை!

பொருளாதார அழிவுக்கு யார் காரணம் என்ற உண்மை விரைவில் வெளியே வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நாம் கதைப்பதை மக்களும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் எதையும் மறந்துவிட வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை அழிவுப்பதைக்கு இட்டுச் செல்கிறார் என்ற காரணத்தினால் தான் அன்று அந்த அரசாங்கத்திலிருந்து நாம் வெளியே வந்து, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளித்தோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அமைச்சர் அலி சப்ரி மறந்துவிட்டார் எனவும், இவையனைத்தும் வேறு யாரோ செய்ததைப் போன்று தான் அலிசப்ரி தற்போது பேசுகிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்று பொருளாதாரத்தை அழித்த ஒருவரை அழைத்து வந்து, பொருளாதாரத்தை உயர்த்த இன்று இவர்கள் செயற்பட்டு வருகிறார்கள்.

மக்களுக்கு உண்மைகள் தெரியும். பொருளாதார அழிவுக்கு யார் காரணம் என்ற உண்மை விரைவில் வெளியே வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply