லொறி மோதி ஸ்தலத்தில் பலியான தம்பதியினர்!

மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பகுதியில் இன்று பதிவாகியுள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் 34 வயதுடைய அமில புஷ்பசிறி என்பவரும் அவருடைய மனைவியான 33 வயதுடைய சத்துரராணி குமாரி என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் தமது மகளை அழைத்துவர சென்றபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய லொறி அதிகவேகத்தில் வந்ததுடன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமலே குறித்த மோட்டார் சைக்கிளை மோதியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply