உத்தேச வேலைவாய்ப்பு சட்டத்தின் வரைவு விரைவில் வெளியிடப்படும்

உத்தேச வேலைவாய்ப்பு சட்டத்தின் முதல் வரைவு விரைவில் வெளியிடப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணம் ஏற்கனவே தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்புச் சட்டத்தின் வரைவு,  பொருளாதார வளர்ச்சியை அடையும் நோக்கத்துடன், பங்குதாரர்களின் விரிவான ஆலோசனைக்குப் பிறகு தயாரிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply