விகாரைக்குள் தகாத உறவில் ஈடுபட்டிருந்த பிக்கு – நையப்புடைத்த மக்கள்!

இலங்கையில், விகாரை ஒன்றின் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் தகாத உறவில் ஈடுபட்டு இருந்த நிலையில்  பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பலேகம சுமண கிமி என்ற தேரரே இரு பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டிருக்கும் போது பிரதேச வாசிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரதேச மக்களால் மூவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன் தினம் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த காணொளி நேற்றைய தினம் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், பிக்கு உட்பட மூவரையும் தாக்கியமை, விகாரையில் காணப்பட்ட பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் காணொளி வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், எட்டு பேரை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் மாகல்கந்தே சுதந்த தேரர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply