யானை தாக்கி நபர் ஒருவர் பலி !

யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தும்பங்கேணி சுரவனையடி ஊற்று கிராமத்தை சேர்ந்த நன்கு பிள்ளைகளின் தந்தையான 59 வயதுடையை நாகமணி நாராயனபிள்ளை என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள வைரவர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு சென்றிருந்த போதே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தினை அடுத்து இன்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் சடலத்தினை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

இப்பகுதியின் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதன் காரணமாக இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக யானை தாக்குதலுக்கு உள்ளாகிவருவதாக குறித்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply