நுவரெலியாவில் பரபரப்பு – நடுவீதியில் கத்தியால் குத்திய நபர்!

நுவரெலியாவின் மத்திய நகரில் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும் நபர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையிலேயே குறித்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் நுவரெலியா பம்பரகலை தோட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய ஆறுமுகம் ஹாரியதாஸ் என தெரியவந்துள்ளது.

குறித்த நபரை கத்தியால் குத்திய பழ வியாபாரி தானாகவே நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பானமேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply