கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் 5வயது சிறுவன் பலி !

வாகன விபத்து ஒன்றில் 5 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கொழும்பு, மகரகமவில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேகமாகப் பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் தந்தை படுகாயமடைந்துள்ளதோடு 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 36 வயதுடைய தந்தையும் அவருடன் பயணித்த அவரது 5 வயது மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதை அடுத்து சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை காரின் சாரதியை கைது செய்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply