பிரேசிலில் கனமழை – 11 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ள தாகவும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடலோர நகரமான ரெசிப் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply