கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை 11 மணி அளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது, சடலமாக மீட்கப்பட்டவர் 60 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் எனவும் இவரை அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை   பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply