தமிழ் நீதிபதிகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த வீரசேகர – கண்டனப் பேரணிக்கு தயார் நிலை!

முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் கண்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டனப் பேரணி நளைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே நீதிமன்ற முன்றலில் நாளை அடையாள கண்டனப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்டனப் பேரணியில் வடமாகாண இதர சட்டத்தரணிகள் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply